பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய தகவல் ஆணையத்தின் 13-ஆவது ஆண்டு மாநாட்டை குடியரசுத்தலைவர் துவக்கிவைக்கிறார்

Posted On: 11 OCT 2018 12:48PM by PIB Chennai

மத்திய தகவல் ஆணையத்தின் 13-ஆவது ஆண்டு மாநாட்டை குடியரசுத்தலைவர்  திரு. ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 12, 2018 அன்று துவக்கிவைக்கிறார். தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் தகவல் உரிமை சட்டத்தை செயல்படுத்துவது என்ற மூன்று தலைப்புகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படுவதோடு, இதன் செயலாக்கத்தை மேம்படுத்தவும் யோசனைகள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      இந்த மாநாட்டில் முதன்மை தலைமை ஆணையர் திரு ஆர் கே மாத்தூர் வரவேற்புரை நிகழ்த்துவார்.  மத்திய தகவல் ஆணையர்கள், மாநில முதன்மை தகவல் ஆணையர்கள், தகவல் ஆணையர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயல்படுத்துவதில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.  

******



(Release ID: 1549418) Visitor Counter : 182


Read this release in: English , Marathi , Hindi , Malayalam