மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தகவல் ஆய்வு மற்றும் டிஜிவார்த்தாவுக்கான திறன் மையத்தை திரு ரவி சங்கர் பிரசாத் திறந்து வைக்கிறார்.

Posted On: 27 SEP 2018 3:31PM by PIB Chennai

நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்படும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள மறைந்த திறனை அரசுத் துறைகள் அடையாளம் காண்பதற்கு வழிவகுக்கும் தேசிய தகவல் மையமும், தேசிய தகவல் மைய சேவைகளின் ஒருங்கிணைந்த அமைப்பும் தகவல் ஆய்வுக்கான சிறந்த திறன் மையத்தை அமைத்துள்ளன.  இம்மையத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத்  இம்மாதம் 28 ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கிறார். 

அரசின் அனைத்து நிலைகளுக்கும், தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதோடு தேசிய தகவல் மையம் முதன்மையான தொழில்நுட்ப ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறது.  இவ்வமைப்பு அரசாங்கத்தில் சமீபத்திய தொழில் நுட்பத்தையும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதில் என்றுமே முதல் முயற்சியை எடுத்துள்ளது.

இந்த மையம் அரசுத் துறைகளின் வர்த்தகத் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றின் தகவல் ஆய்வுத் தேவைகளையும் விவரிப்பதோடு, தகவல் ஆய்வுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான தகவல் தொகுப்புகளையும் வழங்கவிருக்கிறது.

**********


(Release ID: 1547704) Visitor Counter : 186
Read this release in: English , Urdu