பிரதமர் அலுவலகம்

இமாம் உசேன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 13 SEP 2018 2:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தூரில் தாவூதி போரா சமூகத்தினர் நாளை (14.09.2018) ஏற்பாடு செய்துள்ள இமாம் உசேன் தியாகத்தை நினைவு கூரும் ‘ஆஷாரா முபாரகா’ எனும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

  மத்தியபிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், தாவூதி போரா சமூகத்தினரின் ஆன்மிகத் தலைவர் டாக்டர் சையத்னா முஃபாடல் சைபுதீன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

------



(Release ID: 1546028) Visitor Counter : 158