பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

மத்திய அரசின் ஆதரவிலான பன்முகத் திட்டத்தில் 12 ஆவது திட்டக் காலத்திற்கு பின்னரும் ஒருங்கிணைந்த வனவிலங்குகள் இருப்பிட மேம்பாடு தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Posted On: 05 SEP 2018 9:09PM by PIB Chennai

2017-18 லிருந்து 2019-20 வரையிலான 12-ஆவது திட்டக் காலத்திற்கு அப்பாலும், மத்திய அரசு ஆதரவிலான ஒருங்கிணைந்த வன விலங்குகள் இருப்பிட மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை தொடர்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த திட்டம் மத்திய அரசு ஆதரவிலான புலிகள் பாதுகாப்பு, வனவிலங்குகள் இருப்பிட மேம்பாடு மற்றும் யானைகள் பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியதாகும்.  2017-18 லிருந்து 2019-20 வரை மத்திய அரசின் பங்காக மொத்த ஒதுக்கீடு ரூ.1731.72 கோடியாகும். (புலிகள் பாதுகாப்புக்கு ரூ.1143 கோடி, வனவிலங்குகள் இருப்பிட மேம்பாட்டுக்கு ரூ.496.50 கோடி, யானைகள் பாதுகாப்புக்கு ரூ.92.22 கோடி).

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள ஐந்து நிலப்பரப்புகளைச் சேர்ந்த மாநிலங்களில்  மொத்தம் 18 புலிகள் பாதுகாப்பு மையம் இதன்மூலம் பயனடையும்.  அதேபோல், மற்ற இரண்டு திட்டங்களில் வனவிலங்குகள் இருப்பிட மேம்பாட்டுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டை உள்ளடக்கியும், யானைகள் பாதுகாப்புத் திட்டம் யானைகள் அதிகமுள்ள 23 மாநிலங்களை உள்ளடக்கியும் இருக்கும்.  பொதுவாக, வன விலங்குகள் பாதுகாப்புக்கு இது முக்கியத்துவம் அளிக்கும் என்றாலும், புலிகள் பாதுகாப்புத் திட்டப் பகுதியில் புலிகளையும், யானை பாதுகாப்புத் திட்டப் பகுதியில் யானைகளையும் பாதுகாக்கும். 

இந்த திட்டங்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.  மேலும், மத்திய அரசு ஆதரவிலான புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் புலிகள் இருப்பிடங்களிலிருந்து தாமாக முன்வந்து வேறு இடங்களுக்கு மாறிச் செல்வோருக்கும் (6900 குடும்பங்கள்)  மத்திய அரசு ஆதரவிலான வன விலங்குகள் இருப்பிட மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 800 குடும்பத்தினருக்கும்  பயனடையுடையதாக இருக்கும்.

இந்த திட்டங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் பயனாக புலிகள் பாதுகாப்புப் பகுதியில் வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்படும்.  இதுதவிர, இயற்கை வளங்களை சார்ந்திருப்பது குறைவதால், தூய எரிசக்தி மாற்றுக்கு வழிவகுக்கும்.  இந்த திட்டம் ஆண்டுக்கு 30 லட்சம் மனித நாட்கள் வேலை வாய்ப்பை நேரடியாக உருவாக்கும்.  இது உள்ளூர் பழங்குடியின மக்களோடு பழங்குடியினத்தை சாராத உள்ளூர் மக்களையும் உள்ளடக்கியதாகும். 

******



(Release ID: 1545079) Visitor Counter : 591


Read this release in: Marathi , English , Bengali