பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

மாரத்வாடாவின் விதர்பா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட நாட்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளின் நீர்ப்பாசனத் திட்டங்களின் சிறப்புத் தொகுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:10PM by PIB Chennai

மாரத்வாடாவின் விதர்பா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்    நீண்ட நாட்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளின் 83 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களையும், 8 பெரிய / நடுத்தரப் பாசனத் திட்டங்களையும் நிறைவு செய்வதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தாக்கம் :

இந்தத் திட்டங்களின் பயன்பாட்டுப் பகுதிகளில் விவசாயிகளுக்கு உத்தரவாதமான நீர் ஆதாரத்தை இந்தத் திட்டங்களின் நிறைவானது  உறுதிப்படுத்தும். இது அவர்களின் பயிர் விளைச்சலைப் பெருக்கி, அதன்விளைவாக விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும்.

மேலும் விவரங்களுக்கு www.pibnic.in வலைத்தளத்தைப் பார்க்கவும்.

 



(Release ID: 1539456) Visitor Counter : 110


Read this release in: English , Marathi , Bengali