பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பாரதீப் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு (பிபிடி) வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
Posted On:
23 MAY 2018 3:43PM by PIB Chennai
பாரதீப் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு (பிபிடி) வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைக் கீழ்க் காணும் முறையில் தள்ளுபடி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- 31.03.2017 வரையிலான பிபிடி-யின் தண்டவட்டியான ரூ.1,076.59 கோடியும் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டித்தொகையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- தண்டவட்டியைத் தள்ளுபடி செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டிக்கு அபராதமாக 0.25% தொகையை விபிடி வழங்கவேண்டும்.
- தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரை நிலுவையில் உள்ள வட்டியையும், நிலுவையில் உள்ள கடன்தொகையான ரூ.387.74 கோடியையும் திரும்ப செலுத்துவதை பிபிடி தொடங்க வேண்டும். இது 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தவணைகளாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-----
(Release ID: 1533414)
Visitor Counter : 85