சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:47PM by PIB Chennai

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல் 9, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கீழ் வரும் துறைகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும்:-

  1. மருந்து மற்றும் மருந்தகம் தொடர்பான பொருட்கள்;
  2. மருத்துவ நுகர் பொருட்கள்;
  3. மருத்துவ ஆய்வு;
  4. மருத்துவக் கருவி;
  5. பொது சுகாதாரம்;
  6. தொற்றுநோய்க் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு;
  7. சுகாதாரச் சுற்றுலா; மற்றும்
  8. இருநாடுகளுக்கு இடையே பரஸ்பரம் ஆர்வமுள்ள இதர துறைகள்.

ஒத்துழைப்புத் தொடர்பான விரிவான தகவல்கள் அளிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் செயற்குழு அமைக்கப்படும்.  



(Release ID: 1532485) Visitor Counter : 114


Read this release in: English , Telugu , Kannada