நிதி அமைச்சகம்

15-வது நிதி ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் குறித்து ஆலோசனை கூற ஆலோசனைக் குழு ஒன்றை நிதி ஆணையம் அமைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2018 4:08PM by PIB Chennai

15-வது நிதி ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் குறித்து ஆலோசனை கூற ஆலோசனைக் குழு ஒன்றை நிதி ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆலோசனைக் குழுவின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் வருமாறு:

  • ஆணையத்தின் செயல்பாட்டு வரம்புகள் தொடர்பான எந்தவொரு அம்சம் அல்லது பிரச்சனை குறித்தும் ஆணையத்திற்கு தேவையான ஆலோசனை கூறுவது;
  • ஆணையத்தின் செயல்பாட்டு வரம்பு தொடர்பான புரிந்துணர்வுகளை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணியிலும் ஆணையத்திற்கு உதவி செய்வது; மற்றும்
  • ஆணையத்தின் வரம்புகளை விரிவுபடுத்துவதில் உதவி செய்வது மற்றும், நிதி பகிர்வில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை பின்பற்ற உதவுவது மற்றும் தரத்தை மேம்படுத்தி, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்தல்.

ஆலோசனைக் குழுவில் கீழ்கண்ட உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர்.

  1. அரவிந்த் விர்மானி, தலைவர், நிலையான முன்முயற்சிகளுக்கான அமைப்பு.
  2. சுர்ஜித் எஸ்.பல்லா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பகுதி நேர உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கான மூத்த இந்திய பகுப்பாய்வு நிபுணர் மற்றும் ஆக்சஸ் ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர்.
  3. சஞ்ஜீவ் குப்தா, முன்னாள் துணை இயக்குனர் (நிதி விவகாரங்கள் துறை) சர்வதேச நிதியம்.
  4. பினாக்கி சக்கரவர்த்தி, பேராசிரியர் (என்ஐபிஎஃப்பி)
  5. திரு. சஜ்ஜித் சினாய், இந்திய தலைமை பொருளாதார நிபுணர், ஜே.பி. மோர்கன்.
  6. திரு.நீல்காந்த் மிஸ்ரா, நிர்வாக இயக்குனர் மற்றும் கிரிடிட் சூசே இந்தியா பொருளாதார நிபுணர்.

(வெளியீட்டு அடையாள எண்: 1531744) வருகையாளர் எண்ணிக்கை : 372
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu