குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அதிகாரிகள் உள்ளூர் மொழிகளை கற்றுக்கொள்வது முக்கியமாகும்: குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 20 MAR 2018 1:33PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு உள்ளூர் மொழிகளை அதிகாரிகள் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் இது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளூர் மக்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவித்துள்ளனர். புது தில்லியில் இன்று தன்னைச் சந்தித்த நாக்பூர் நேரடி வரிகள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 71 –வது இந்திய  வருவாய்ச் சேவை பணிப் பயிற்சி அதிகாரிகளுடன் அவர் உரையாடினார். 

அதிகாரிகள் தங்களுடைய தாய் மொழியில் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். உங்களுடைய தாய்மொழியில் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் எத்தனை மொழிகளை கற்க முடியுமோ, அவற்றைக் கற்க வேண்டுமென்றும், எந்த மொழிக்கும் எதிராக செயல்பட வேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பணியை செய்ததாகவும், நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்த இந்தியக் குடிமைப் பணி, இந்தியக் காவல் பணி போன்றவற்றை அவர் உருவாக்கியதாகவும், அதிகாரிகள் திறன் படைத்தவர்களாகவும், அப்பழுக்கற்றவர்களாகவும், நல்ல ஒழுக்கமானவர்களாகவும்  குணசாலிகளாகவும், திறன் வாய்ந்தவர்களாகவும், இருக்க வேண்டியதன் அவசியத்தை பாடேல் வலியுறுத்தியதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.



(Release ID: 1525392) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Hindi