பிரதமர் அலுவலகம்

குஜராத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 06 MAR 2018 2:18PM by PIB Chennai

குஜராத்தில் ஏற்பட்ட விபத்திற்கு வருத்தத்தையும் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்களையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“குஜராத் மாநிலத்தின் ரங்கோலா அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானதும்  கவலைக்குரியதும் ஆகும். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***



(Release ID: 1522787) Visitor Counter : 108