நிதி அமைச்சகம்
உள்ளார்ந்த உயர் வளர்ச்சிக்காக பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துகளை பதினைந்தாவது நிதி ஆணையம் வரவேற்கிறது.
Posted On:
22 FEB 2018 4:42PM by PIB Chennai
பதினைந்தாவது நிதி ஆணையம் விதிமுறைகளுக்காக பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் வரவேற்றுள்ளது.
ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் வருமாறு:
- பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றி மாநிலங்களுக்கு வரிப் பரவலாக்கத்தை மத்திய அரசு கணிசமாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள நிதிநிலையின் தாக்கத்துடன் 2022 புதிய இந்தியா திட்டம் உள்ளிட்ட தேசிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் அவசியமாகிறது.
- ஜி.எஸ்.டி நடைமுறையால், ஐந்தாண்டுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட இழப்பீடு வழங்குவது, ஏராளமான தீர்வைகள் ரத்து, இதர அமைப்பு ரீதியிலான சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால், மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையில் தாக்கம் ஏற்படுகிறது.
- ஜி.எஸ்.டி-யின் கீழ், வரி வளையத்தை விரிவுபடுத்தும் மாநிலங்கள் எடுத்த முயற்சிகள்.
- மக்கள் தொகை பெருக்க விகிதத்துக்கு மாற்றாக எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் முன்னேற்றம்.
- வரி, வரியல்லாத வருவாயைப் பெருக்குவது, நேரடி பயன்மாற்று திட்டத்தை கடைபிடித்து சேமிப்பை அதிகரிப்பது, பொது நிதி மேலாண்மை முறை, டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது, அரசுக்கும், பயனாளிகளுக்கும் இடையிலான அடுக்குகளை அகற்றுவது ஆகியவற்றில் அடைந்துள்ள முன்னேற்றம்.
- சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, திறந்தவெளி கழிப்பிட முறையை முடிவுக்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றில் அடைந்த முன்னேற்றம்.
கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க விரும்பும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் 2018 ஜூன் 30 ஆம் தேதிக்குள் பின்வரும் முறையில் அவற்றைத் தெரிவிக்கலாம்.
- செயலர், 15-வது நிதி ஆணையம், 9-வது தளம், ஜவஹர் வியாபார் பவன், டால்ஸ்டாய் மார்க், புதுதில்லி - 110001 என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பலாம்.
- secy-xvfc[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
- http://fincomindia.nic.in என்ற வலைதளத்தின் மூலமாக ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு அனுப்புவது.
(Release ID: 1521469)
Visitor Counter : 123