குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விநாயகர் சதுர்த்தி – குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

Posted On: 24 AUG 2017 10:56AM by PIB Chennai

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். நமது நாட்டில், விநாயகக் கடவுள் ஞானம்செழிப்பு, அதிர்ஷ்டம்  ஆகியவற்றின் பண்புருவமாகக் கருதப்படுகிறார்;  எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன்பும் விநாயகக் கடவுள் பெயரை உச்சரிப்பது பொதுவான வழக்கம் ஆகும் என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவரின் வாழ்த்து செய்தி:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.

விநாயகர் சதுர்த்தி விநாயகக் கடவுளின் பிறந்த நாளை குறிக்கிறது. நமது நாட்டில், விநாயகர் ஞானம்செழிப்பு, அதிர்ஷ்டம்  ஆகியவற்றின் பண்புருவமாகக் கருதப்படுகிறார். எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன்பும் விநாயகக் கடவுளின் பெயரை உச்சரிப்பது பொதுவான வழக்கம் ஆகும்.

இந்தப் பண்டிகை நம் நாட்டில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுவரட்டும் என்று குடியரசு துணைத் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

*******



(Release ID: 1500578) Visitor Counter : 283


Read this release in: English