நிதி அமைச்சகம்

துப்புரவுத் துண்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி வீதம்

Posted On: 10 JUL 2017 6:49PM by PIB Chennai

துப்புரவுத் துண்டுகளின் ஜி.எஸ்.டி. வரிவீதம் பற்றி பல்வகை பத்தி எழுத்தாளர்களின் குறிப்புரைகள் உள்ளன. இப்பொருளின் மீது வரிவீதம் ஜி.எஸ்.டி. க்கு முன்னும் மற்றும் பின்னும் ஒன்றாக அல்லது சற்றுக் குறைவாக இருக்கிறது. துப்புரவுத் துண்டுகள் தலைப்பு 9619க்குக் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. ஜி.எஸ்.டி. வருகைக்கு முன் அவை 6% சலுகைக் கலால் வரி மற்றும் 5% வாட் பெற்றன. மேலும் ஜி.எஸ்.டி. க்கு முன் துப்புரவுத் துண்டுகளின் மேல் விதிக்கப்பட்ட மொத்த வரி 13.68% ஆகத்தான் இருந்தது. ஆகையால் துப்புரவுத்துண்டிற்கு 12% ஜி.எஸ்.டி. வரியாக அளிக்கப்பட்டு உள்ளது.

துப்புரவுத்துண்டுகள் தயாரிப்பதற்கான பெரும்பான்மை மூலப்பொருள் மற்றும் விதிக்கப்படும் வரி வீதம் ஆகியவை கீழே இருக்கிறவாறு உள்ளன:

அ) 18% ஜி.எஸ்.டி. வரிவீதம்

o அதிக உறிஞ்சும் தன்மையுள்ள பாலிமர்

o பெருமளவு எத்திலின் படலம்

o பசை

o மெல்லிய குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தலின் (LLDPE)– கட்ட உதவும் மூடி

ஆ) 12% ஜி.எஸ்.டி. வரிவீதம்

o வெப்பத்தால் ஒட்டிகொண்டிருக்கிற பின்னப்படாத

o விடுவிப்புத் தாள்

o மரக் கூழ்

 

துப்புரவு துண்டுகள் செய்வதற்கு வேண்டிய மூலப்பொருள்கள் மட்டும் 12% ல் 18% தை கவர்கின்றன. ஜி.எஸ்.டி. அமைப்பில் தலைகீழாக்கு நிலை காணப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ளச் ஜி.எஸ்.டி. சட்டப்படி அப்படிச் சேரும் வருமான வரி திரும்ப கொடுக்கப்பட்ட போதிலும், அதோடு தொடர்புடைய பொருட்செலவு (வட்டிச்சுமை) மற்றும் நிர்வாகச் செலவு, இறக்குமதி என்கிற பிற்போக்கு நிலைக்கு அவர்களைத்தள்ளும் .அது நேருக்கு எதிரான நிலையில் நிதித்தடையால் ஏற்படும் பொருட்செலவு மற்றும் நிர்வாகச் செலவை திரும்ப கொடுக்க வெண்டிய நிலை இல்லாமல் இருந்தாலும் இறக்குமதி மீது12% அனைத்துலக ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.

துப்புரவுத்துண்டுகளின் மீதான ஜி.எஸ்.டி. 12% ல் இருந்து 5% மாக குறைக்கப்பட்டால் வரி தலைகீழாகும் நிலையை மேலும் அதிகரித்து மேலும் அதிகமாக ஐ.டி.சி. கூடும் நிலையை ஏற்படுத்தி அதற்கொத்த அதிகப்பொருட்செலவை நிதித்தடை மற்றும் தொடர்புடைய நிர்வாகச்செலவு ஆகியவற்றால் உள்நாட்டு தொழிலாளர்களை இறக்குமதி மூலம் மேலும் பிந்தங்கிய நிலையில் விட்டுவிடும்..

ஜி.எஸ்.டி. வரிவீதத்தை ஒன்றும் இல்லாத நிலைக்குக் குறைப்பது உள்நாட்டு துப்புரவுத் துண்டுகள் உற்பத்தி செய்வோருக்கு ஐ.டி.சி. யை முழுமையாக தடுத்து இறக்குமதி வரியை பூஜ்யமாக்குவதாகும். இது உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டுள்ள துப்புரவுத்துண்டுகளை எதிரெதிராக உள்ள இறக்குமதியால் பெரிய பின் தங்கிய நிலைக்குத் தள்ளி அதனுடைய மதிப்பைப் பூஜ்யமாக்கிவிடும்.

*****


 

 



(Release ID: 1498996) Visitor Counter : 75


Read this release in: English