சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேன் இயக்கத்தின் கீழ் பயனாளிகளுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் 200 தேனீ பெட்டிகளை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2023 4:14PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் 200 தேனீ பெட்டிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் விஸ்வ பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், தேன் இயக்கத்தின் கீழ் 20 தேன் சேகரிப்பாளர்களுக்கு தேனீக்களுடன் கூடிய 200 தேனீ பெட்டிகளை வழங்கினார். 100 மண்பானைக் கலைஞர்களுக்கு 100 மின்னணு மண்பானை இயந்திரங்களையும், குப்பையிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கும் 40 கலைஞர்களுக்கு 40 கருவிகளையும், 40 மரத் தச்சர்களுக்கு 40 கருவிகளையும், 60 பனைக் கலைஞர்களுக்கு 30 கருவிகளையும் அவர் வழங்கினார்.
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், பிரதமரின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 8,038 பயனாளிகளுக்கு ரூ.125.92 கோடி முதலீட்டு மானியத் தொகை வழங்கினார். இதன் மூலம் 64,304 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், தேன் இயக்கத்தின் கீழ் இதுவரை ரூ.182.45 லட்சம் மதிப்புள்ள 8400 தேனீ பெட்டிகளை 840 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.
EBW8.jpeg)
Z66P.jpeg)
***
ANU/SMB/BS/RR/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1989602)
வருகையாளர் எண்ணிக்கை : 122