நிதி அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் நிறைவு
प्रविष्टि तिथि:
21 AUG 2026 9:14PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது.
இரண்டாம் நாளான இன்று (21.08.2026) பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், துறைசார் ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொது நிதி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதிச் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பயிலரங்கில், இந்திய ரிசர்வ் வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், அனைத்து 12 பொதுத்துறை வங்கிகள், 7 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், 7 பொதுத்துறை நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த மனிதவளத் துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சுகம்யா பாரத் முன்முயற்சியை முன்னிலைப்படுத்தும் வகையில், அணுகல் தரநிலைகள் மற்றும் இணக்கத் தேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணுகல் வசதிகள் தொடர்பான சட்ட விதிகள் குறித்து வட்டமேசைக் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிதிச் சேவைகள் சூழலமைப்பில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் அணுகலையும் உறுதி செய்வதற்காக, நிறுவனத் திறனை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்துப் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக, இந்தப் பயிலரங்கில் கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302195®=3&lang=1
(Release ID: 2302195)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302211)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English