ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித் துறையில், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:41PM by PIB Chennai

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ்தொழில்நுட்ப ஜவுளித் துறையில்ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கான ஆராய்ச்சிதொழில்முனைவோருக்கான மானியம் (கிரேட்) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம்தெலங்கானா உட்பட நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஜவுளித் துறையில்புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பிற்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளம் கண்டுபிடிப்பாளர்கள்விஞ்ஞானிகள்தொழில்நுட்ப வல்லுநர்கள்புத்தொழில் நிறுவனங்கள் தங்களது யோசனைகளை வணிக ரீதியான தொழில்நுட்பங்கள்தயாரிப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான உதவிகளை இது வழங்குகிறது.

நடப்பு நிதியாண்டிற்கான (2026-27) தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.256 கோடியாகும். இதில் கிரேட் திட்டத்தின் கீழ்புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஒதுக்கீடும் அடங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ்தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 ஆராய்ச்சித் திட்டங்களும்இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிக் கல்வியில்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பொது வழிகாட்டுதலின் (தனியார்பொது நிறுவனங்களுக்கு) கீழ் ஒரு கல்வி நிறுவனத்தின் விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்ரிட்டா இன்று மக்களவையில்கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில்இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297519&reg=3&lang=1

***

SS/SV/SH

 


(रिलीज़ आईडी: 2297899) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी