அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர் - நாளந்தா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 1:25PM by PIB Chennai
அறிவியல், நிலையான வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டை சர்வதேச உயர் கல்வியுடன் ஒருங்கிணைக்கும் வகையில், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, நாளந்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சச்சின் சதுர்வேதி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) திரு. ருத்ரேந்திர டாண்டன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
இக்கூட்டணி மூலம் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி -ன் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கல்விச் சூழலமைப்பைப் பயன்படுத்தி மாதிரி கிராம வளர்ச்சி, கழிவு மேலாண்மை மற்றும் நீர் தர மேம்பாடு போன்ற சமூகச் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆரம்பக் கட்டமாக நாளந்தா பகுதியில் மூன்று முக்கியச் சமூகத் திட்டங்களைச் செயல்படுத்த அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி,முன்மொழிந்தார்.
மேலும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மற்றும் சர்வதேசப் பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்த நாலந்தா பல்கலைக்கழக வளாகத்தில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தொழில்நுட்பக் கண்காட்சி கூடம் அமைக்கப்படவுள்ளது.
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2287984)
आगंतुक पटल : 6