பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டைக் கட்டமைத்தல், ஒட்டு மொத்த வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 JUL 2026 8:32AM by PIB Chennai

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்யும் போது, அது நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய  உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இது போன்ற ஊக்கமளிக்கும் உணர்வுடன் இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்த நாடு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மகளிர் நலன்களை உறுதி செய்தல், இளைய தலைமுறையை பாதுகாத்து வளர்த்தல், நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, வளமை, முறையான ஆட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை அமைத்தல் ஆகியவை ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியின் கடமையாகும் என்று  சுபாஷிதம் கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283971&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2284027) வருகையாளர் எண்ணிக்கை : 49