பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் ஆறாவது உள்நாட்டு மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான மகேந்திரகிரி படையில் இணைகிறது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 7:28PM by PIB Chennai
இந்தியக் கடற்படை தனது ஆறாவது 'ப்ராஜெக்ட் 17ஏ' உள்நாட்டு மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான மகேந்திரகிரியை (F38), 2026 ஜூலை 11 அன்று விசாகப்பட்டினத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவுள்ளது.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கம்பீரமான மகேந்திரகிரி மலைத்தொடரின் பெயரைச் சூட்டிக்கொண்டுள்ள இந்தக் போர்க்கப்பல், மீள்திறன், வலிமை மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அமைவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மும்பையைச் சேர்ந்த மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனத்தால் கட்டப்பட்ட, ப்ராஜெக்ட் 17ஏ-இன் ஆறாவது மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான மகேந்திரகிரி, உள்நாட்டுப் போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு அம்சங்களைக் கொண்டுள்ள 'மகேந்திரகிரி', இந்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்குச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இதன் கட்டுமானப் பணிகளில் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறைகளின் பரந்த வலையமைப்பு ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது; இது நாட்டின் பாதுகாப்புத் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விரும்பப்படும் பாதுகாப்புப் பங்காளராக தனது பங்கை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் பங்களிப்பதிலும் 'மகேந்திரகிரி' ஒரு வலிமையான ஆற்றல் சக்தியாகத் திகழும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281806®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2281835)
आगंतुक पटल : 10