சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு கிஷன் ரெட்டி ஆகியோர் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்களைத் தடுப்பது குறித்த கூட்டத்தில் பங்கேற்று ஆய்வு செய்தனர்

प्रविष्टि तिथि: 05 JUL 2026 8:53PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கங்கள் தடுப்பு மற்றும் நிலக்கரித் திருட்டு தடுப்பு குறித்து ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய நிலக்கரிச் செயலாளர், நிலக்கரி அமைச்சகம், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, கோல் இந்தியா லிமிடெட், பிசிசிஎல் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, தன்பாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் மற்றும் திருட்டு மோசமடைந்து வரும் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்தார். 2025 அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிலக்கரி அமைச்சகம், சிஐஎஸ்எஃப் ஆகியவை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினார். இருப்பினும், சட்டவிரோத சுரங்கத் தொழிலின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டவிரோத சுரங்கத் தொழிலைத் தடுக்க பல முக்கிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சர் வழங்கினார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தவறாமல் ஆய்வு செய்யுமாறு நிலக்கரி அமைச்சகத்திற்கு திரு அமித் ஷா அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281361&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2281415) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी