பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி குறித்த தேசிய நிர்வாக மாநாடு ஜம்முவில் 2026 மார்ச் 3 அன்று நடைபெறவுள்ளது - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2026 3:12PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் - பொது குறைதீர்ப்புத் துறை, ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து, 2026 மார்ச் 3 அன்று ஜம்முவில் "மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுகை" என்ற கருப்பொருளில் ஒரு நாள் தேசிய நிர்வாக மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோர் இணைந்து இந்த தேசிய நிர்வாக மாநாட்டைத் தொடங்கி வைத்து தொடக்க உரை நிகழ்த்தவுள்ளனர்.
இந்த நிகழ்வின் தொடக்க அமர்வில் 2023, 2024-ம் ஆண்டுகளுக்கான பிரதமரின் விருது பெற்ற மாவட்டங்களின் மேம்பாட்டு மாதிரிகளின் விளக்கம் இடம்பெறும்.
ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த ஒரு பிரத்யேக அமர்வும் இடம்பெறும்.
இந்த நிர்வாக ஆளுகை மாநாட்டில், இந்தியா முழுவதிலுமிருந்து மூத்த நிர்வாகிகள், கள வல்லுநர்கள், பொது நிர்வாகத் துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234169®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234288)
வருகையாளர் எண்ணிக்கை : 9