ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாறிவரும் நிலத்தடி நீர் வள மதிப்பீட்டின் ஆய்வு முடிவுகள்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 5:45PM by PIB Chennai

நாட்டின் மாறிவரும் நிலத்தடி நீர் வளங்கள் ஆண்டுதோறும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) மற்றும் மாநில அரசுகளால் மதிப்பிடப்படுகின்றன. 2025 மதிப்பீட்டின்படிநாட்டின் மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் ஆதாரம் 448.52 பில்லியன் கனமீட்டர் மற்றும் வருடாந்திர நிலத்தடி நீர் பயன்பாடு குறித்த வளங்கள் 407.75 கனமீட்டராக  மதிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான முழு நாட்டின் மொத்த வருடாந்திர நிலத்தடி நீர் பயன்பாடு 247.22 கனமீட்டராக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய நீர்வள வரைபட மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1,30,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2023 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 1,05,829 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ்பூஷன் சௌத்ரி இதனைத்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206073&reg=3&lang=1  

***

(Release ID: 2206073)

AD/BR/SE


(रिलीज़ आईडी: 2206318) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी