பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை: மத்திய அமைச்சர் ஜுயல் ஓரம் தகவல்

प्रविष्टि तिथि: 18 DEC 2025 3:17PM by PIB Chennai

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலைபி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’  திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார்.

ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள்  20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்குபெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கல்விக்கட்டணம்விசா கட்டணம்மருத்துவக் காப்பீடு மற்றும் விமானப் பயணச் செலவுகள் வழங்கப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்இதற்கான நிதி மாணவர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் நேரடியாகச் செலுத்தப்படுவதால் நிலுவைத் தொகைகள் ஏதுமில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205837&reg=3&lang=1

***

 

AD/VK/SE


(रिलीज़ आईडी: 2206277) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी