உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு விநியோக கட்டமைப்பில் சிறந்த மேலாண்மை கடைப்பிடிக்கப்படுகிறது – மத்திய இணையமைச்சர் திரு ரவ்னித் சிங்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 3:16PM by PIB Chennai

உணவு விநியோக  கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை எதிர்கொள்ளவும், உணவுப்பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யவும் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம், உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறைக்காக  உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தி வருகிறது.  அத்துடன் பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் முறைப்படுத்துதல் திட்டத்தையும் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. திறன்மிக்க நவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வேளாண் பண்ணையிலிருந்து சில்லறை விற்பனை நிலையம் வரை முறையான விநியோக  மேலாண்மையை ஏற்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். அதன் மூலம் விவசாயிகளுக்கு சிறந்த லாபம் கிடைப்பதுடன் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சேதமும் சாகுபடிக்குப் பிந்தைய இழப்பும் குறைந்து உற்பத்தியை மேம்படுத்தி பதப்படுத்துதல் நிலையை அதிகரிக்கச் செய்ய முடியும்.

இத்தகவலை மக்களவையில் இன்று (04 டிசம்பர் 2025) உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சர் திரு ரவ்னித் சிங் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198691&reg=3&lang=1 

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2198988) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी