தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 25 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
25 NOV 2025 4:08PM by PIB Chennai
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.
2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,54,82,771 கணக்கெடுப்பு படிவங்கள் (99.16%) இதுவரை (2025 நவம்பர் 25) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி அலுவலர்கள், 11,40,598 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,19,66,147 கணக்கெடுப்பு படிவங்கள் (96.65%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3,76,37,033 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 9,80,081 படிவங்கள் (95.94%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6,68,316 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194113
***
SS/IR/KPG/SH
(Release ID: 2194321)
Visitor Counter : 6