தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இட்டாவா நகரில் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது
Posted On:
29 SEP 2025 11:37AM by PIB Chennai
உத்திரப்பிரதேச மாநிலம் இட்டாவா நகரில் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து, 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது. 2025 ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை 346.9 கிலோமீட்டர் தொலைவிற்கு நகரம் சார்ந்த சோதனையை நடத்தியது. 12 முக்கிய இடங்கள், 1.7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைவாயிலான சோதனை உள்ளிட்ட விரிவான சோதனைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய குழுவினர் நடத்தினார்கள்.
பல்வேறு கைப்பேசிகளை வைத்துள்ள பயனாளர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி தொழில்நுட்பங்கள் தரம் உள்ளிட்டவை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
நெரிசல் மிக்க பகுதிகளில் மொபைல் சேவையின் தரம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக 2025 ஆகஸ்ட் 14 அன்று இட்டாவா ரயில் நிலையத்தில் நடைவாயிலான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விரிவான விவரங்களை www.trai.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172576
SS/IR/LDN/SH
(Release ID: 2172646)
Visitor Counter : 7