பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் ஆளுகையில் டிஜிட்டல் மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான இணையவழி கருத்தரங்கு

Posted On: 22 AUG 2025 3:26PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தங்கள், பொது குறைதீர்ப்பு துறை சார்பில் புதுதில்லியில்  இன்று தேசிய மின்-ஆளுகை இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டிஜிட்டல் மாற்றத்திற்கான தொழில்நுட்பம் மூலம் அரசு நடைமுறைகளை மேம்படுத்துவதில் மாநில/யூனியன் பிரதேச அளவிலான முன்முயற்சியில் சிறந்து விளங்குதல்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாஸ், அமர்வுக்குத் தலைமை வகித்தார். சேவை வழங்குதலை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் புதுமைகளை விரைவுபடுத்தவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை  அவர் பாராட்டினார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மத்திய - மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், இந்தியா முழுவதும் அவற்றை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த இணையவழி கருத்தரங்கு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

***

(Release ID: 2159757)

AD/SS/PLM/AG/DL


(Release ID: 2159894)
Read this release in: English , Urdu , Hindi