சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் நியமனம்
Posted On:
29 JUL 2025 10:24AM by PIB Chennai
அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தின் படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெலங்கானா, மத்தியப் பிரதேசம், குவஹாத்தி உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அதன்படி, தெலங்கானா உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கௌஷ் மீரா மொகைதீன், சலபதிராவ், வகிடி ராமகிருஷ்ணா ரெட்டி, கடிபிரவின் குமார் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் புஷ்பேந்திர யாதவ், ஆனந்த்சிங் பராவத், அஜய்குமார் நிராங்காரி, ஜெய்குமார் பிள்ளை, ஹிமான்ஷு ஜோஷி, நீதித்துறை அதிகாரிகள் ராம்குமார் சௌபே, ராஜேஷ்குமார் குப்தா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு நீதித்துறை அதிகாரிகள் அலோக் அசோதி, ரத்னேஷ் சந்திர சிங், பகவதி பிரசாத் ஷர்மா, பிரதிப் மிட்டல் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குவஹாத்தி உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் அஞ்சன்மோனி, ராஜேஷ் மசும்தார், நீதித்துறை அதிகாரிகள் பிரஞ்சல் தாஸ், சஞ்சீவ்குமார் ஷர்மா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
***
(Release ID: 2149541)
AD/SM/PLM/RJ
(Release ID: 2149575)