மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைகள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்த பயிலரங்கம் : கால்நடை பராமரிப்பு அமைச்சகமும் ஐநா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பும் இணைந்து புதுதில்லியில் நடத்தின
Posted On:
21 JUN 2025 10:27AM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இந்தியாவில் விலங்குகள் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் புது தில்லியில் ஒரு பயிலரங்கை ஏற்பாடு செய்தது. ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் தகவல்தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்தப் பட்டறை நேற்று (2025 ஜூன் 20 நடைபெற்றது.
விலங்குகள் மற்றும் கால்நடைகள் தொடர்பான அரசு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். மக்களை மையமாகக் கொண்ட கால்நடை தகவல் தொடர்பு திட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு தளமாக இந்தப் பயிலரங்கம் செயல்பட்டது.
கால்நடை பராமரிப்பு ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா, தொற்றுநோய் நிதி திட்டத்தின் இலக்குகளை அடைவதில் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு உத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஐநாவின் உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் இந்திய உதவி பிரதிநிதி டாக்டர் கோண்டா சாவ்வா, தகவல்தொடர்பு என்பது ஒரு சுகாதார அணுகுமுறையின் முக்கிய தூண் என சுட்டிக் காட்டினார்.
பயிலரங்கின் முக்கிய சிறப்பம்சமாக மூத்த பத்திரிகையாளர்கள் பங்கேற்ற ஊடக குழு விவாதம் நடைபெற்றது. ஊடகங்கள் கால்நடை சுகாதார செய்திகளை எவ்வாறு வெளியிடுவது என்பதை இந்த அமர்வு ஆராய்ந்தது.
****
(Release ID 2138225)
AD/PLM/RJ
(Release ID: 2138615)