நிதி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புதுதில்லியில் தேசிய நேர வெளியீட்டு ஆய்வின் ஐந்தாவது பதிப்பை வெளியிட்டார்
Posted On:
20 JUN 2025 6:15PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய (சிபிஐசி)மாநாட்டின் போது, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தேசிய நேர வெளியீட்டு ஆய்வின் ஐந்தாவது பதிப்பை வெளியிட்டார்.
நேர வெளியீட்டு ஆய்வு என்பது சரக்கு வெளியீட்டிற்கு எடுக்கப்பட்ட நேரத்தின் அளவு மதிப்பீட்டை வழங்கும் ஒரு செயல்திறன் அளவீட்டு கருவியாகும், இது அனுமதி செயல்முறையின் செயல்திறனை மதிப்பிட உதவுகிறது. 2019 முதல், துறைமுகங்கள், விமான சரக்கு வளாகங்கள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் உட்பட 15 முக்கிய இடங்களில் நேர வெளியீட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்தியாவின் நேர வெளியீட்டு ஆய்வின் முக்கிய பலம், சிபிஐசி-இன் அமைப்புகள் மற்றும் தரவு மேலாண்மை இயக்குநரகத்தால் இயக்கப்படும் சுங்க தானியங்கி அமைப்பிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட துல்லியமான மற்றும் நம்பகமான தரவைப் பயன்படுத்துவதில் உள்ளது. பல ஆண்டுகளாக, நேர வெளியீட்டு ஆய்வின் நோக்கம் கணிசமாக விரிவடைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நுழைவாயில் துறைமுகங்களில் வெளியீட்டு நேரத்தை அளவிடும் அறிக்கையாகத் தொடங்கியது, போக்குவரத்து சரக்கு, கூரியர் போக்குவரத்து மற்றும் பொருட்கள் சார்ந்த மதிப்பீடுகள் போன்ற கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த பிற பகுதிகளையும் உள்ளடக்கியது.
ஐந்தாவது பதிப்பு நிலை வாரியான மற்றும் செயல்முறை சார்ந்த மதிப்பீடுகளை செயல்படுத்த மேம்பட்ட முறைகளையும் ஏற்றுக்கொண்டது. இந்தப் பதிப்பு அதன் புவியியல் கவரேஜை கொச்சி துறைமுகம், கர்ஹி ஹர்சரு உள்நாட்டு கொள்கலன் கிடங்கு மற்றும் ஜெய்கான் நில சுங்க நிலையம்
ஆகிய மூன்று கூடுதல் துறைமுகங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் மற்றொரு மைல்கல்லைக் குறித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138073
***
(Release ID: 2138073)
AD/RB/DL
(Release ID: 2138150)