கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் நல்லாட்சியால், 2029-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால்
Posted On:
14 JUN 2025 7:30PM by PIB Chennai
2029-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா உறுதியாகச் செல்வதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று திப்ருகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சியாக வளர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
கொள்கை முடக்கம், வாரிசு அரசியல் ஆகியவற்றில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளதாகவும், வளர்ச்சி, இளைஞர்களால் இயக்கப்படும் புதுமைகள், உள்கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றால் நாடு இப்போது சக்தி பெறுவதாகவும் கூறினார். பத்து ஆண்டுகளில், 25 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் என்று திரு சர்பானந்தா சோனாவால் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பொருளாதார முன்னேற்றங்களை எடுத்துரைத்த அமைச்சர், நான்காவது பெரிய உலகப் பொருளாதாரமாக இந்தியா எழுச்சி பெற்றுள்ளதாகவும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் கூறினார். 2029-ம் ஆண்டுக்குள், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என அவர் தெரிவித்தார். ஒரு வளர்ந்த, தற்சார்பு பாரதத்திற்கான அடித்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது என அவர் கூறினார்.
வடகிழக்குப் பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் தலைமையில் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி இதுவரை 70 முறைக்கு மேல் வடகிழக்குக்குப் பகுதிக்கு பயணம் செய்துள்ளதாகவும் வரலாற்றில் வேறு எந்த பிரதமரையும் விட இது அதிகம் எனவும் அவர் கூறினார். சமீபத்தில் 'ரைசிங் நார்த்ஈஸ்ட்' உச்சிமாநாட்டில் ₹4.5 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு இப்பகுதியில் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் திரு சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2136365)
AD/PLM/SG
(Release ID: 2136407)