சுரங்கங்கள் அமைச்சகம்
புது தில்லியில் நடைபெற்ற அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்தில் சுரங்க அமைச்சகம் பங்கேற்பு
Posted On:
07 JUN 2025 5:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நாடு தழுவிய அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, சுரங்க அமைச்சகம் புது தில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் மரக்கன்று நடும் இயக்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வுக்கு சுரங்க அமைச்சக செயலாளர் திரு வி.எல். காந்த ராவ் தலைமை வகித்தார். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.
தற்போது இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வானது உணர்ச்சிபூர்வமான தொடர்புடன் இணைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நட இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிப்பட்ட பங்கேற்பின் முக்கியத்துவத்தை திரு வி.எல். காந்த ராவ் எடுத்துரைத்தார். மேலும் மக்கள் தங்கள் தாய்மார்களுக்கும் தாய் பூமிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக மரக் கன்றுகளை நட ஊக்குவித்தார்.
பசுமையான, தூய்மையான, நிலையான இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளை ஆதரிப்பதில் சுரங்க அமைச்சகம் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
***
(Release ID: 2134853)
AD/TS/PLM/DL
(Release ID: 2134877)