சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
"இயந்திர மொழிபெயர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் புரட்சி: அனுவதினியும் பிற கருவிகளும்" என்னும் தேசிய பயிலரங்கைப் புதுச்சேரி பல்கலைக்கழகம் மே 28 அன்று நடத்த உள்ளது
Posted On:
27 MAY 2025 5:35PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திமொழித் துறை, மொழி தொழில்நுட்பத்திற்கான ஓர் அறிமுகம் என்ற பாடத்தின் கீழ் 25-வது தேசிய பயிலரங்கை 2025 மே 28 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் பயிலரங்கின் தலைப்பு "இயந்திர மொழிபெயர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் புரட்சி: அனுவதினியும் பிற கருவிகளும்” என்பதாகும்.
இந்தப் பயிலரங்கிற்கு இந்திமொழித் துறைத்தலைவர், டாக்டர் சி. ஜெயசங்கர் பாபு தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்வு, இயந்திர மொழிபெயர்ப்பிற்கான செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தும். குறிப்பாக மத்திய அரசின் ‘அனுவதினி’ செயற்கை நுண்ணறிவு தளத்தின் திறன்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
இந்தப் பயிலரங்கில் அனுவதினி செயற்கை நுண்ணறிவு தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏஐசிடிஇ-யின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரியுமான டாக்டர் புத்த சந்திரசேகர் உரையாற்றுவார்.
இந்தப் பயிலரங்கு கூகுள் மீட் மூலம் இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் பயிலரங்க அமர்வில் இணையலாம்: https://t.ly/cLwVI
இதுகுறித்த தகவல்களையும் பிறவற்றையும் அறிந்துகொள்ள, புதுச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்பட்ட அழைப்பிதழைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://t.ly/bZAsC பயிலரங்கிற்கான பதிவு இலவசம். பின்வரும் இணைப்பு மூலம் அனைவரும் பங்கேற்கலாம்: https://t.ly/LnFNS
***
AD/SMB/AG/RJ
(Release ID: 2131701)