தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளின் செயல்திறன் குறித்த கண்காணிப்பு அறிக்கையை சமர்ப்பிக்கும் நடைமுறையில் தானியங்கிமயமாக்கல்
Posted On:
17 APR 2025 5:48PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் திருத்தியமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவை மற்றும் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிட்டது. இந்த விதிமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி முதன்மை கரவு சேகரிப்பு, அதன் சேமிப்பு, செயலாக்கம், செயல்திறன் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பது மற்றும் அவற்றை ஆணையத்திடம் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கும் நடைமுறைகள் தொடர்பான விதிமுறைகளை ஆறு மாதங்களுக்குள் சேவை வழங்கும் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் அல்லது மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளின் செயல் திறன் குறித்த கண்காணிப்பு அறிக்கையை அதற்கான காலம் முடிவடைந்ததிலிருந்து 15 நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கனள் தங்களது செயல்முறைகளை தானியங்கிமயமாக்குதல் மற்றும் வர்தத்கம் புரிதலை எளிதாக்குவதற்கான ஒரு முக்கிய படி நிலையாக, அமைந்துள்ளது.
இது தொடர்பான விவரங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசகர் திரு தேஜ்பால் சிங்கை adv-qos1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +91-11-20907759 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் ..
---
TS/SV/KPG/K/DL
(Release ID: 2122512)