சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுவைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி - துணை வேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு மரியாதை செலுத்தினார்

Posted On: 14 APR 2025 11:04PM by PIB Chennai

புதுவைப்  பல்கலைக்கழகம் பாரத ரத்னா டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை இன்று (ஏப்ரல் 14, 2025)  சிறப்பாகக் கொண்டாடியது. அம்பேத்கர் நிர்வாகக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில்ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் துணை வேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு  உரையாற்றினார்.

தனது உரையில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அதிலும் குறிப்பாக அரசியல் சாசனத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அவரின் பங்களிப்புகளை துணைவேந்தர் எடுத்துரைத்தார்சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களை உயர்த்துவதிலும், சமூகநீதி, பெண்களின் உரிமைகள், தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கம் போன்ற முக்கியமான துறைகளிலும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்றியும் துணைவேந்தர் எடுத்துக் கூறினார். டாக்டர் அம்பேத்கரின் கனவை நனவாக்க, ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் அறிவார்ந்த ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்கு முயற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு  பாத  யாத்திரையைத் தொடங்கி வைத்தார், இதில் ஏராளமான என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல்களின் சிறப்பு புத்தகக் கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார். இந்தக் கண்காட்சி பல்கலைக்கழக நூலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில், சிறப்பு  இட ஒதுக்கீட்டுப் பிரிவின் இணைப்பு  அதிகாரியான பேராசிரியர் பி. ஜி. அருள்  வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், கல்விப்புல இயக்குநர் பேராசிரியர் . தரணிக்கரசு, கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள் இயக்குநர் பேராசிரியர் கிளெமென்ட் சகயராதா லொர்ட்ஸ், பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூட்டானி, அதிகாரிகள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை துணைப் பதிவாளர் (கல்வி) மற்றும் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவு அதிகாரி திரு அஜய் பாபு  ஒருங்கிணைத்தார்.

***

SV/RJ


(Release ID: 2121685)
Read this release in: English , Tamil