நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.எஸ்.ஓ) மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி) ஆகியவற்றின் 15 வது முழுமையான கூட்டத்தை இந்திய தர நிர்ணய அமைவனம் நடத்துகிறது

Posted On: 09 APR 2025 6:27PM by PIB Chennai

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தரங்களை வடிவமைப்பதில் ஒரு பெரிய பங்கை ஏற்க இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) ஏற்பாடு செய்துள்ள செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச தரங்களை உருவாக்குவதற்கான சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு (ஐ.எஸ்.ஓ) மற்றும் சர்வதேச மின்னணு தொழில்நுட்ப  ஆணையம் (ஐ.இ.சி) ஆகியவற்றின் தொழில்நுட்பக் குழுவின் 15 வது முழுமையான கூட்டத்தின் தொடக்க விழாவின் போது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி கரே கூறினார்.

செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை குறிப்பாக எல்.ஏல்.எம் (பெரிய மொழி மாதிரி) மற்றும் எஸ்.எல்.எம் (சிறிய மொழி மாதிரி) ஆகியவற்றை பொறுப்பான முறையில் முன்னேற்றுவதற்கு அரசு  செயற்கை நுண்ணறிவு உறுதிபூண்டுள்ளது, இவை உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தேசிய முன்னுரிமைகள் இரண்டையும் மனதில் கொண்டு உருவாக்கப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். தேசிய செயற்கை நுண்ணறிவு உத்திகளை உள்ளடக்கிய, சூழல் விழிப்புணர்வு மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப உலகளாவிய தரங்களுடன் சீரமைப்பதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மையின் (ஜி.பி.ஏ.ஐ) நிறுவன உறுப்பினர் என்ற முறையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் உள்ள முக்கிய பங்குதாரர்களுடன் இந்தியாவின் நீடித்த ஈடுபாடு மற்றும் கூட்டாண்மை குறித்து பிரதிபலித்தார். 'நன்மைக்காகவும் அனைவருக்காகவும்' செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அவர், செயற்கை நுண்ணறிவு செயல்படும் முறையை ஜனநாயகமயமாக்குவதற்கும் பரவலாக்குவதற்கும் இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், செயற்கை நுண்ணறிவுக்கான தரங்களை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய பி.ஐ.எஸ் இயக்குநர் ஜெனரல் திரு பிரமோத் குமார் திவாரி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தர மேம்பாட்டிற்காக அமைவனம் துறை சார்ந்த குறிப்பிட்ட குழுக்களை உருவாக்கியுள்ளது மற்றும் குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவு தர மேம்பாட்டிற்காக அமைச்சகங்கள், கல்வியாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்தியுள்ளது என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120521

 

***

(Release ID: 2120521)

RB/DL


(Release ID: 2120610)
Read this release in: English , Urdu , Hindi