சுற்றுலா அமைச்சகம்
பின்தங்கிய மற்றும் ஊரகப் பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி
Posted On:
17 MAR 2025 3:50PM by PIB Chennai
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் உறுதுணையாக உள்ளது.
உள்நாட்டு சுற்றுலா, புனித யாத்திரை, ஆன்மிக பாரம்பரிய விரிவாக்க இயக்கம் (பிரஷாத்) மற்றும் 'சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய முகமைகளுக்கு உதவி செய்வது போன்ற திட்டங்களின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம், ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகள் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
இலக்கை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றி நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலா தலங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், 'மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவியாக – உலக அளவில் சிறிய அளவிலான சுற்றுலா மையங்களை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், 23 மாநிலங்களில் ரூ.3295.76 கோடி மதிப்பிலான 40 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111816
***
TS/SV/RJ/DL
(Release ID: 2111979)
Visitor Counter : 13