ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

'தூய்மையே சேவை' இயக்கத்தையும் 'சிறப்பு இயக்கம் 4.0' -ன் முன்னேற்றத்தையும் ஆயுஷ் அமைச்சர் ஆய்வுசெய்தார்

Posted On: 26 SEP 2024 5:09PM by PIB Chennai

தற்போது நடைபெற்று வரும் 'தூய்மையே சேவை இயக்கம்',  'சிறப்பு இயக்கம் 4.0' ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய ஆயுஷ் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு  பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு வி.டி.ராஜேஷ் கொடேச்சா, அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் நாடு முழுவதும் 521 தூய்மை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பது கூட்டத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது.

 சிறப்பு இயக்கம்  4.0-ன்  நோக்கங்களை நிறைவேற்ற  திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஆயுஷ் துறை  அமைச்சர் வலியுறுத்தினார்.  தற்போதைய நடவடிக்கைகளின் நிலையை மதிப்பிடுவதற்கும், இயக்கத்தின் முன்முயற்சிகளை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் ஆயுஷ் அமைச்சக அதிகாரிகளுடன் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கலந்துரையாடினார்.

 "பிரதமரின் தொலைநோக்கு முயற்சியான தூய்மை இயக்கத்தை  செயல்படுத்துவது நமது கடமை. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த இயக்கத்தின் இலக்குகளை அடைய நாம் அர்ப்பணிப்புடனும் ஆற்றலுடனும் பணியாற்ற வேண்டும்" என்று அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.

விரிவான தேசிய தூய்மை இந்தியா இயக்கத்துடன் இணைந்து, தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஆயுஷ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த ஆய்வுக் கூட்டம் எடுத்துக்காட்டியது.

 

***

SMB/AG/DL



(Release ID: 2059230) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Marathi , Hindi