சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

2024-ல் ஒலிம்பிக் வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு உறையை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது

Posted On: 15 AUG 2024 2:14PM by PIB Chennai

78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2024-ல் ஒலிம்பிக் வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு உறையை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ளது. இதனை தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி மரியம்மா தாமஸ் 15.08.2024 அன்று வெளியிட்டார். நாட்டிற்கு புகழ் சேர்த்துள்ள நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, திறமை, விடாமுயற்சி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு உறை சான்றாக திகழ்கிறது. அவர்களின் சாதனைகள் நாட்டிற்கு பெருமிதத்தை கொண்டுவந்திருப்பது மட்டுமின்றி, திறமையை தொடர எதிர்கால தலைமுறைக்கு ஊக்கத்தையும் கொண்டுவந்துள்ளன.

இத்துடன் “அஞ்சல் சேவை-மக்கள் சேவை” என்ற புதிய தலைப்புடன் தனித்துவமிக்க இந்திய அஞ்சல் இலச்சினையைக் கொண்டுள்ள மணம் வீசும் படம் உள்ள அஞ்சல் அட்டையையும் திருமதி மரியம்மா தாமஸ் வெளியிட்டார்.  நாடு முழுவதும் உள்ள பல வகையான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அஞ்சல் மற்றும் பொது சேவைகளை திறமையுடன் வழங்குவதிலும் அஞ்சல் துறையின் உறுதிப்பாட்டின் அடையாளமாக இந்தப் புதிய வடிவமைப்பு விளங்குகிறது.

சிறப்பு உறையும் மணம் வீசும் அஞ்சல் அட்டை படமும் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகத்தின் தபால் தலை சேகரிப்பு பிரிவில் கிடைக்கும். தபால் தலை சேகரிப்போரும், பிற ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருமிதத்தோடு இவற்றை வாங்கி பாதுகாக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

   

 

   

***

SMB/RS/KV



(Release ID: 2045591) Visitor Counter : 59


Read this release in: English