சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மூத்த நிதி பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான ஐ.டி.இ.சி திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்

Posted On: 24 JUL 2024 6:13PM by PIB Chennai

"நிதி மற்றும் பொருளாதார குற்றங்களை எதிர்ப்பதில் புதிய எல்லைகள்: உலகளாவிய நிதி பாதுகாப்பை நோக்கி" என்ற இரண்டு வார ஐ.டி.இ.சி பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி, 2024 ஜூலை 23, அன்று காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், நடைபெற்றது.

 

இந்த ஐ.டி. இ. சி பயிற்சி திட்டத்தில் 16 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ஓய்வு பெற்ற சிறப்பு செயலாளர் திரு பிரவின் சின்ஹா, இன்டர்போல் செயற்குழு உறுப்பினர்; திரு. விராஜ் சிங் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சட்ட உதவி பேராசிரியர் திருமதி நோமிதா மிஸ்ரா, ஐ.டி.இ.சி திறன் பயிற்சி திட்டத்திற்கான நிகழ்வு அறிக்கையை வழங்கினார். இந்த நிகழ்வில் பதினாறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், என்எஸ்இ, என்எஸ்இஐசிசி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


திரு. பிரவின் சின்ஹா, திரு. விராஜ் சிங் ஆகியோர் நிதி மோசடிகளை விசாரித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 


இதில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் ஐ.டி.இ.சி திறன் மேம்பாட்டு திட்டத்தின் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்,

          

***

 


(Release ID: 2036476)
Read this release in: English