சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவராக மரியம்மா தாமஸ் பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2024 7:01PM by PIB Chennai

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் புதிய தலைமை அஞ்சல் துறை தலைவராக திருமதி மரியம்மா தாமஸ் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதுமாக 11,583 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

 

திருமதி மரியம்மா தாமஸ் இந்திய அஞ்சல் சேவை (IPoS) 1994-ம் வருட அதிகாரி ஆவார். இவர் கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் வடகிழக்கு (ஷில்லாங்) அஞ்சல் வட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் மிகுந்த அதிகாரி ஆவார்.

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 2036045) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English