சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்காக செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனையை தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது
Posted On:
14 OCT 2023 6:50PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பு சோதனை நடத்தப்படும் என்பதை தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டில், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை அமைப்பின் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
பல்வேறு மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒலிபரப்பு முறையில் உள்ள முறைகளின் அவசர எச்சரிக்கை ஒலிபரப்பு திறன்களின் செயல்திறனை அளவிடுவதற்கு நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் இந்த சோதனைகள் அவ்வப்போது செய்யப்படும்.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது எச்சரிக்கையை பெறுபவர்கள், குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் பேரழிவு மேலாண்மைக்கான முக்கியமான மற்றும் உரிய நேரத்தில் சென்று சேரக்கூடிய எச்சரிக்கை செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது.
இது முக்கியமான அவசரத் தகவல் முடிந்தவரை பலரை சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்கிறது. சாத்தியமான அச்சுறுத்தல்களைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும், நெருக்கடியான சூழ்நிலைகளை அவர்களுக்குத் தெரிவிக்கவும் இது அரசாங்க முகவர் மற்றும் அவசரகால சேவைகளால் பயன்படுத்தப்படுகிறது.
கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற முக்கியத் தகவல் போன்ற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க செல் ஒலிபரப்பு எச்சரிக்கை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
சோதனைக் காலத்தில், மக்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் அவசர எச்சரிக்கைகளைப் பெறலாம். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும் உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம். குழப்பத்தைத் தவிர்க்க ஒவ்வொரு சோதனை எச்சரிக்கையும் ஒரு சோதனைச் செய்தி என்று தெளிவாகக் குறிப்பிடப்படும்.
20ம் தேதியன்று தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியின் கீழ் வரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் (புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள்) சோதனைகள் நடத்தப்படும். கணினியின் தயார்நிலையைப் பொறுத்து, கடைசி நேரத்தில் கூடுதல் தகவல் இல்லாமல் சோதனை அட்டவணையில் மாற்றங்கள் இருக்கலாம்.
***
AD/ BS/DL
(Release ID: 1967750)
Visitor Counter : 193