சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை வருமானவரித்துறை ஆணையரகம் சார்பில் தூய்மையே சேவை இயக்கம்

Posted On: 01 OCT 2023 4:13PM by PIB Chennai

வருமானவரி தலைமை ஆணையரகம் (வரிப்பிடித்தம் ) சென்னை சார்பாக, இந்திய அரசாங்கத்தின் திட்டமான "தூய்மையே சேவை" என்ற அடிப்படையில், குப்பையில்லா இந்தியாவை உருவாக்கும் ஒரு முயற்சியாக,  01-10-2023 அன்று , அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் சுற்று புறத்தில், தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தூய்மை இயக்கத்தில் திரு ராஜசேகர் ரெட்டி லக்காடி, இ.வ.ப, தலைமை ஆணையர் (வரிப்பிடித்தம்), சென்னை, திரு M முரளி, இ.வ.ப, ஆணையர் (வரிப்பிடித்தம்), சென்னை, திரு M அர்ஜுன் மாணிக், இ.வ.ப, இணை ஆணையர், TDS சரகம் -3, சென்னை மற்றும் அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டு, கோயில் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தனர்.

இந்த தூய்மையை இயக்கத்திற்கு ஆணையரகம், இந்துசமய அறநிலைய துறை  பெருநகர சென்னை மாநகராட்சியும் ஒத்துழைப்பு நல்கியது.

இந்த தூய்மை இயக்கத்தில் ,ANNA PARK WALKERS ASSOCIATION, கோடம்பாக்கம்  என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில்  15 தன்னார்வலர்கள் SRM கல்வி குழுமம் சார்ந்த 20 மாணவர்களும்  பங்கு பெற்றனர்.

மேலும், இந்த தூய்மை இயக்கத்தில் , திரு ஆதிமூலம் , தக்கார்  அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் மற்றும் திரு பாஸ்கர் , சென்னை மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ஆதரவு நல்கினர்.

        

        

*** 

AP/DL



(Release ID: 1962725) Visitor Counter : 97


Read this release in: English