நிதி அமைச்சகம்

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

Posted On: 29 SEP 2023 6:00PM by PIB Chennai

2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது  இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்.

 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29 ஏ இன் கீழ் (1951 இன் 43) பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை அல்லது மாநில சட்டமன்றத்திற்கான கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதி பெற்றவையாகும். தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலமே தகுதிவாய்ந்த அரசியல் கட்சியால் பணமாக்கப்படும்.

 

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) XXVIII மூன்றாம் கட்ட விற்பனையில், 04.10.2023 முதல் 13.10.2023 வரை அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடவும் பணமாக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு இது செல்லுபடியாகும். இந்தக் கால அவகாசம் முடிந்த பின்னர் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால் எந்த அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்படாது. தகுதிவாய்ந்த  ஓர் அரசியல் கட்சி தனது கணக்கில் டெபாசிட் செய்த தேர்தல் பத்திரம் அன்றே வரவு வைக்கப்படும்.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் பத்திரம் விற்பனை செய்வதற்கு, 336/166,  தம்புச்செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை -600001- என்ற முகவரியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

***

AP/ANU/SMB/RS/KRS



(Release ID: 1962222) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Hindi