சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோட்ட அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் 16.06.2023 அன்று நடைபெற உள்ளது

Posted On: 05 JUN 2023 6:25PM by PIB Chennai

கோட்ட அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம்  சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் 16.06.2023 அன்று நடைபெற உள்ளது.

     தபால் சேவை சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தப்பட்டதாக புகார் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்வேண்டும்.

குறைகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 13.06.2023

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி

“அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம்”

நா. பிரகாஷ் , முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை 600 002.

தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல்சேவை குறைதீர்க்கும் முகாம்” என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

***



(Release ID: 1930003) Visitor Counter : 94


Read this release in: English