சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

உயர் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியுடன் முழுமையான வளர்ச்சி


கடந்த 9 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள்/ஐஐடிகள்/ஐஐஎம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது

Posted On: 22 APR 2023 7:27PM by PIB Chennai

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்க ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான கல்விக்கான நுழைவாயில்களை அதிகரிக்க அரசு  குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2014ல் 723 ஆக இருந்தது. 2023ல் 1,113 ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் 5,298 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன (2014 இல் 38,498 ஆக இருந்தது 2023 இல் 43,796 ஆக), இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான கல்விக்கான அணுகலை அதிகரிக்க வழிவகுத்தது. 43% பல்கலைக்கழகங்களும், 61.4% கல்லூரிகளும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் ஐஐடி மற்றும் ஐஐஎம்களின் எண்ணிக்கையையும் அரசு விரிவுபடுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 7 ஐஐடிகள் மற்றும் 7 ஐஐஎம்கள் கட்டப்பட்டதன் மூலம், மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கான மேம்பட்ட வாய்ப்புகளை அரசு உறுதி செய்துள்ளது.

பல்கலைக்கழகங்கள்/    ஐஐடிகள்/      ஐஐஎம்கள்

 

ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் கல்வி முறையின் வளர்ச்சியில் முற்போக்கான நிறுவன அமைப்பு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. உயர்தர கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் அவர்களின் கவனம் இந்தியாவை பல்வேறு துறைகளில் உலகளாவிய தரத்தில் நிலைநிறுத்த உதவியது.

 

ஆதாரம்:

•    https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1894517

•    https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/AISHE2014-15.pdf

***

CJL/DL



(Release ID: 1918811) Visitor Counter : 77


Read this release in: English