சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம் 27.03.2023 அன்று நடைபெற உள்ளது
Posted On:
22 MAR 2023 12:10PM by PIB Chennai
அஞ்சல் சேவை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கான கோட்ட அளவிலான குறைதீர் முகாம் 27.03.2023 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. புகார்களை தபால் மூலமாவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 24.03.2023 அன்று அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பவேண்டும்.
முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை, தலைமை தபால் நிலையம், சென்னை 600 002. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக புகார்களை அனுப்பலாம். அல்லது நேரிலும் வழங்கலாம். annaroadho-dop[at]nic[dot]inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்கள் மற்றும் குறைகளை அனுப்பலாம்.
தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் “அஞ்சல் சேவை குறைதீர் முகாம்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் தகவலை சென்னை அண்ணா சாலை, தலைமை தபால் நிலையத்தின் முதன்மை அஞ்சல் அதிகாரி திரு நா.பிரகாஷ் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1909422)