சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்தியாவின் மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் "பகுதிநேர அயலகப் பணியாளர்கள்" முக்கியப் பங்காற்றுவதாக ஐஐடி மெட்ராஸ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது

பகுதிநேர அயலகப் பணியாளர்களுக்கு, பெரும்பாலும் அவர்களின் தொழில்நுட்பத் திறன்களுக்காக வழங்கப்படும் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை பற்றி குறைத்து மதிப்பிடப்பட்டாலும்,ப்ராஜக்ட்டுகளை செயல்படுத்தும் போது ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்

Posted On: 17 MAR 2023 12:52PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்  (ஐஐடி மெட்ராஸ்) கண்டறிந்த ஆய்வின்படி, நெடுஞ்சாலைகள், நகர்ப்புற ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை 'முன்னணி' அல்லது 'புத்தம்புதிய' நிறுவனங்கள் செயல்படுத்தும்போது, அப்பணிகள் சுமுகமாக நடைபெற இந்திய பொதுத்துறை வாடிக்கையாளர்கள் பணியமர்த்தும் பகுதிநேர அயலகப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

உலகெங்கும் உள்ள வளரும் நாடுகள் நவீன உலகத்தைப் படைக்க அவசரம் காட்டி வருகின்றன. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. நெடுஞ்சாலைகள், நகர்ப்புற ரயில் போக்குவரத்து, விமான நிலையங்கள் ஆகிய கட்டுமானத் திட்டங்களை திட்டமிட்டுச் செயல்படுத்துவது வழக்கமான ஒன்றாகும்.

ஆழமான இந்தப் பகுப்பாய்வில்,  இந்தியாவில் உள்கட்டமைப்பு முன்னணித் திட்டங்களை செயல்படுத்தும்போது ஆரம்ப கட்டங்களில் எதிர்கொள்ளும் சவால்கள், இந்தத் திட்டங்களை சுமுகமாக நிர்வகிக்க  வழிவகுக்கும் செயல்முறைகளை உருவாக்க பரிமாறப்பட்ட வெவ்வேறு விதமான கருத்துக்கள் போன்ற அம்சங்களை ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்தார்.

இந்திய வாடிக்கையாளர்கள் பணியமர்த்திய பகுதிநேர அயலகப் பணியாளர்கள்தான் பெரும்பாலான சிக்கல்களுக்குத் தீர்வுகாண காரணமாக இருந்திருப்பதும், ப்ராஜக்ட்களைப் பொருத்தவரை இந்தப் பணியாளர்கள் கணக்கில் கொள்ளப்படாத நபர்கள் என்பதும் ஆய்வுக் கட்டுரையின் மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. மெகா திட்டங்களை எவ்வாறு சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும் என்பதற்கான முக்கிய நுண்ணறிவை இந்த ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளது.

டெல்லி மெட்ரோவுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டு மெட்ரோ ரயில் மெகா திட்டங்கள் குறித்து அனுபவ ரீதியான தரவுகளை ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் ஆய்வு செய்தார். இத்தகைய திட்டங்களில் அங்கம் வகிக்கும் வெவ்வேறு நிறுவனங்களின் பணி நடைமுறைகள் தொடர்பான கருத்து மோதல்களால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது.  

திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது முரண்பாடான தர்க்கங்கள் உண்டாகும் பட்சத்தில், செயல்முறை அல்லது படிநிலை அடிப்படையில் வெற்றிடம் ஏற்பட்டு அப்பணிகள் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மாறிவிட வழிவகுக்கும். பணிகளின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய வெற்றிகரமாக வழிநடத்தப்பட வேண்டும் என ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற, மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் International Journal of Project Management (https://doi.org/10.1016/j.ijproman.2022.04.007) வெளியிடப்பட்டு உள்ளது. பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். 

இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்து ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் கூறுகையில், "அயலகப் பணியாளர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத் திறன்களுக்காக அடிக்கடி பணியமர்த்தப்படுகின்றனர். இருப்பினும், அவர்களுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை, ஒப்பந்ததாரர் தரப்பில் பிற அயலகப் பணியாளர்களை தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவை குறைத்து மதிப்பிடப்பட்டாலும் அவை ப்ராஜக்ட்டுகளில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உத்தியை பெருந்திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்." என்றார்.

பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம் மேலும் கூறும்போது, "பரிவர்த்தனை இடங்களை மறுகட்டமைத்தல், படிநிலையை வலுப்படுத்துதல், மத்தியஸ்தம் செய்தல் ஆகிய மூன்று வகையான சமாளிப்பு உத்திகளைப் பயன்படுத்தி அயலகப் பணியாளர்கள் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுள்ளனர். இத்தகைய திட்டங்களை நிர்வகிப்பதில் அயலகப் பணியாளர்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறித்துத்தான் இந்த ஆய்வில் பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளது. மெகா திட்டங்களை மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை சமாளிப்பது தொடர்பான உத்திகள் தொடர்பான எங்களின் ஆய்வு முடிவுகள் நடைமுறைப்படுத்துவோருக்கு உதவிகரமாக இருக்கும்.  இவற்றை செயல்படுத்தும்போது குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகிய மிக முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தவும், பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை சீராக வழங்கவும் முடியும் என நம்புகிறோம்" என்றார்.

பரிவர்த்தனை இடங்கள் மறுகட்டமைத்தலைப் பொருத்தவரை, அயலகப் பணியாளர்கள் தகவல் பரிமாற்ற வழியை குறிப்பாக பணம் செலுத்துவதற்கான ஒப்புதல் செயல்முறைகளை மாற்றியுள்ளனர்.

படிநிலையை வலுப்படுத்துவதை எடுத்துக் கொண்டால், முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்களைச் சென்றடையும் வரை, கட்டுமானச் செயல்முறை விரைந்து நடைபெற அயலகப் பணியாளர்கள் தூண்டுதலாக இருப்பார்கள்.

இவை தவிர, கூடுதல் தகவல்களை வழங்கியும் எதிரெதிர் தரப்புகளுக்கு இடையே உரையாடலை ஏற்படுத்தியும் அயலகப் பணியாளர்கள் மத்தியஸ்தராகச் செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களுடனான அவர்களின் நிறுவனத் தொடர்பு, ஒப்பந்ததாரருடன் பணிபுரியும் பிற அயலகப் பணியாளர்களுடனான அவர்களின் தொழில்முறை தொடர்பு காரணமாக அவர்களின் நம்பகத் தன்மை இத்திட்டங்களில் மத்தியஸ்தராக இருக்க உதவியிருக்கிறது.

 

###



(Release ID: 1907921) Visitor Counter : 119


Read this release in: English