சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் திரு. எல்.முருகன் திருவள்ளூர் மக்களுடன் இணைந்து கேட்கிறார்

Posted On: 25 FEB 2023 7:18PM by PIB Chennai

பிரதமரின் 98-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் வானொலி உரையை மத்திய  தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல்.முருகன், திருவள்ளூர் மாவட்டத்தின் மனவாளன் நகர் மக்களுடன் இணைந்து கேட்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் உரையாடும், மன் கீ பாத் எனப்படும் மனதில் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும், கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது.

அந்த வரிசையில் பிப்ரவரி 26ம் தேதியான நாளை காலை 11 மணிக்கு பிரதமரின் 98-வது மனதின்  குரல் நிகழ்ச்சி, வானொலியில் ஒலிபரப்பாகிறது. இதனை மத்திய  தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல்.முருகன், திருவள்ளூர் மாவட்டத்தின் மனவாளன் நகர் மக்களுடன் இணைந்து கேட்க உள்ளார். மனவாளன் நகரில் உள்ள மாஸ் வி7 & மார் வி6  திருமண  அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

***

SRI  / ES / DL



(Release ID: 1902382) Visitor Counter : 97


Read this release in: English