ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர்வள இயக்கத்தின் இலக்குகள்

தமிழகத்தில் இதுவரை 74 லட்சம் வீடுகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

Posted On: 02 FEB 2023 3:45PM by PIB Chennai

நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக நீர்வள இயக்கத்தை மாநில அரசுகளுடன்  இணைந்து மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும், தலா ஒருவருக்கு 55 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். குஜராத், தெலங்கானா, ஹரியானா, கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாதர் நாகர் ஹவேலி,  டாமன்-டையு ஆகிய பகுதிகளில் 100 சதவீதம் அளவுக்கு  பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான 3.60 லட்சம் கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்காக 2.08 லட்சம் கோடி ரூபாய் இருக்கும்.

ஜனவரி 31, 2023 வரை தமிழ்நாட்டில் உள்ள 125.51 லட்சம் கிராமப்புற வீடுகளில் 74.03 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகலை மக்களவையில் இன்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

***

AP/IRS/RS/RR


(Release ID: 1895752) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Manipuri